பூர்வாங்க மற்றும் அவ்வப்போது நடைபெறுகின்ற மருத்துவ பரிசோதனை என்பது ஊழியர்களின் மருத்துவ மதிப்பீட்டை குறிப்பாக குறித்தொதுக்கியிருக்கினறது. ஊழியர்களை தகுதியான வேலைகளில் அமர்த்துகின்றபோது இது அதி முக்கியமான பிரிவாகும். வேலைகளை வினைத்திறன்மிக்கவகையில் நிறைவேற்றுவதற்காக ஊழியர்களின் சுகாதார நிலையை அவ்வப்போது மதிப்பீடு செய்து பார்ப்பது அத்தியாவசியமானதாகும். உயிரியல் ஆய்வுகள் குறித்த வேலைகளை உற்பத்தித்திறன் மிக்க வகையிலும் வினைத்திறன் மிக்கவகையிலும் நிறைவேற்றுவதற்குத் தேவையான உடற்றகுதி ஊழியர்களுக்கு இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை அதன்மூலம் கைத்தொழிலில் ஊழியர்கள் சமுகமளிக்காத நிலையும் சுகாதார செலுவுகளும் குறையும்.
ஊழியர்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனத்தால் பின்வரும் சேவைகள் வழங்கப்படுகின்றன.
உடல் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, நுரையீரலின் செயற்பாட்டைப் பரிசோதித்தல், செவிப்புல நிலையை அளந்தறியும் பரிசோதனை உள்ளிட்ட கம்பனியின் மருத்துவ பரிசோதனைகள்.
இச்சேவை தொடர்பான சிறப்பம்சம்
இடர்களை அடையாளம் காண்பதை அடிப்படையாகக் கொண்ட பூர்வாங்க மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குகின்ற ஒரே அரச அமைப்பு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனமாகும். வெளிக்கொணரப்படுகின்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்ட சுகாதார நிலையை மதிப்பீடு செய்வதை மருத்துவப் பரிசோதனை முக்கியமாக இலக்காகக் கொண்டிருக்கின்றது. குறித்த விடயங்களை அடிப்படையாகக்கொண்ட அறிக்கையொன்றை ஊழியருக்கு வழங்குகின்ற அதேவேளை ஊழியரின் சுகாதார மதிப்பீட்டையும் இடர்களையும் இனம் காண்பதை அடிப்படையாகக்கொண்ட விசேட அறிக்கையொன்று கம்பனிக்கு வழங்கப்படும்.
சேவைகளின் தன்மை